அருவுரு ஆன அன்னலே அற்புத சுடரே சுயம்பு பின் திருவுரு வே சுடரின் ஒளியே திருநிலையில் ஒருநிலை கொண்ட பெரியாண்டவர் கவசம் இதனை எண்ணி வழிபடுவோர் துன்பம் நீங்கி என்றுமே இன்பம் வரும்
மனைவி, மக்கள், தாய், தந்தை அனைவருடனும் சேர்ந்து வாழுங் கள்.அவர்களுக்கான எல்லாக் கட | மைகளையும் செய்யுங்கள். ஆனால் மன்தை மட்டும் இறைவனிடம் செலுத்துங்கள். குடும்ப உறவு களோடு சேர்ந்து வாழும் அதே வேளையில், அவர்கள் உன்னுடை யவர்கள் அல்ல என்பதையும் உணர்ந்து கொள்.
-ஸ்ரீராமகிருஷ்ணர்.
2. ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறையில்தான் இருக்கிறது.
3. கடவுளைக் காண முற்படுகிறவன் பக்தன்!!! அவனைக் கண்டுணர்ந்தவன் சித்தன்!!!
4. தேவைக்காக இறைவனை தேடாமல் தேவையே நீதான் இறைவா என்றிறு! உன் இதயமே இறைவன் சன்னதியாகும் உன் வாக்கே இறையருளாகும்! அகத்தியர் அருள்வாக்கு!
5. தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா.
அகத்தியர்
6. அற்புதம் நிறைந்த இவ் உடலை அற்பமாய் இழந்துவிடாதே மானிடா!!
சமநீதி
7. ஒருவன் எம்மை நாடாவிட்டாலும் பரவாயில்லை! மெய்யாகவே தர்மவானாக, எல்லா நிலைகளிலும் நல்லவனாக. தன் மனசாட்சிப்படி வாழ்ந்து வந்தால், அவன் எம்மை தேடவேண்டாம். யாமே அப்படிப்பட்ட மனிதனைத் தேடிச் செல்வோம். அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!"
அதர்வண வேதம் பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது.[1] இது உச்சாடனம் மாந்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும் . இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.
இந்து சமயப் பெண் தெய்வம் ஆவார். பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இவர் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். அதர்வணபத்ரகாளி நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.
ஏவல், பில்லி, சூனியம், மாந்திரிகம், வைப்பு முதலானவை நீங்கிவிடும்.
*"நவராத்திரி காப்பில் பங்கு பெறுவதால் 5 தலைமுறைகளைக் காப்பேன்" என்பது அன்னையின் அருள்வாக்கு.*
காப்பு என்ற சிறப்பு அலங்காரம் அன்னையின் அருள் பாதுகாப்பினை நமக்குப் பெற்றுத் தருகிறது.
நவராத்திரி காப்பு இன்றைய உலகத்தில் இருக்கும் பல பிரச்சனைகளை உணரவும், அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் நவராத்திரி காப்பு உதவும்.
*தங்கக் கவசம்*
1. தங்கம் போன்ற குணம் பெற, நல்ல சிந்தனைகளை நாம் பெற, தர்மத்திற்கும், அன்பிற்கும், பக்திக்கும், பாசத்திற்கும், தான் எப்போதும் கவசமாக விளங்குவதை உணர்த்த அம்மா இந்தத்
தங்கக் கவசத்தை அணிகிறாள்.
2. "பங்காரு" என்றால் தங்கம் என்று பொருள். இப்பூவுலகில் தருமத்தை நிலைநாட்ட "பங்காரு" என்ற திருப்பெயர் கொண்ட அம்மாவின் உள்ளே இருந்து நம்மைக் காப்பதையும் இந்த காப்பு நமக்கு உணர்த்துகிறது.
3. தங்கத்தினை நெருப்பில் இட்டு அதனைத் தூய்மை பெறச் செய்து விரும்பியபடி நகை செய்து கொள்வதைப் போல உலகியலில் பல துன்பங்களையும், சோதனைகளையும், அம்மாவின் துனையுடன் நாம் கடந்து வந்தால், அம்மாவின் அருள் என்ற அமுதம் நமக்குக் கிடைக்கும் என அன்னை நமக்கு இதன் மூலம் புரியவைக்கிறாள்.
*குங்குமக் காப்பு*
1. மகாலட்சுமி வாசம் செய்யும் குங்குமக் காப்பு.
2. 'ஓம் குங்கும மேனி கொண்டாய் போற்றி ஓம்' என்ற அன்னையின் மந்திரமே இதற்கு அருள் சாட்சியாக விளங்குகிறது.
3. பொருளாதாரக் கஷ்டங்கள், கடன் தொல்லைகள், சிக்கல்கள், வழக்குகள், மன நிம்மதியின்மை, ஆகியவற்றில்
இருந்து காப்பது குங்குமக் காப்பு.
4. காலனையும் வெல்லும், வியாபார முன்னேற்றம் அளிக்கும்.
5. செல்வவளம் தரும்.
*மஞ்சள் காப்பு*
1. மங்கலம் தரும் மஞ்சள் காப்பு
2. மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டில் நல்ல நாட்களில் மஞ்சள் நீர் தெளித்தால், அமைதியும், சாந்தமும், உடல் ஆரோக்கியமும் நிலவும்.
3. கிராமங்களிலும், நகரங்களிலும், தெய்வங்களின் தேரோட்டத்திற்கு முன்னர் மஞ்சள் நீர் தெளிப்பது வழக்கம்.
4. அம்மாவின் அருள் ஆசி பெற்று நடக்கும் ஆன்மீக ஊர்வலங்கள், ஆன்மீக பாதயாத்திரைகள், அனைத்திலும் மஞ்சள் நீரை முதலில் தெளித்தபடி ஒரு பக்தர் செல்வது வழக்கம்.
5. பெண்கள், குடும்பத்தில் நல்ல நாட்களில், மஞ்சள் தேய்த்துக் குளிப்பது வழக்கம்.
6. பெண்களின் திருமாங்கல்யத்தில் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வதன் மூலம் அன்னையின் அருளால் அவர்கள் தாலிபாக்கியம் மேலும் வலுப்பெறுகிறது.
7. குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் பலரும் அன்னையை வேண்டி நம் சித்தர்பீட சன்னதியில் தொட்டில் கட்டுவது போல, திருமணமாகாத ஆடவரும், பெண்களும் ஒரு மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சள் கிழங்கு முடித்து, சித்தர்பீட சன்னிதியில் அன்னையை நினைத்துக் கட்டுவதால் திருமணப்பேறு உண்டாகிறது.
8. எளிமையானவர் முதல் செல்வந்தர் வரை அனைவராலும் பயன்
படுத்தக்கூடிய இந்த மஞ்சளை அன்னையை விரும்பி ஏற்று மகிழ்கிறாள்.
*சிறுதானியக் காப்பு*
1. கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, சோளம் ஆகிய சிறுதானியங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் அவற்றின் சக்தி மிகப் பெரியதாகும்.
2. மற்ற தானியங்களை விட 3 முதல் 5 மடங்கு வரை சக்தி வாய்ந்தது இந்தச் சிறுதானியங்கள்.
3. சிறுதானிய உணவு வகைகளை நாம் சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெற்று நோய்கள் இன்றி வாழவும் அம்மா நமக்கு வழிகாட்டுகிறாள்.
4. சிறிது, பெரிது, என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் உணர்த்துகிறாள்.
*வேப்பிலைக் காப்பு*
1. குடும்பப் பிணி நீங்கும்.
2. ஏவல், பில்லி, சூனியம் ஆகியவை பறந்தோடிப் போகும்.
3. பிரசாதமாக இதனை உண்ண, நோய் பறந்து விடும்.
4. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
5. வேம்பின் கீழ் பாலாக அன்னை வெளிப்பட்டதன் மூலமாகவும், வேப்பிலை ஏந்தி அருள் கோலத்தில் வெளிபடுவதன் வாயிலாகவும், இந்த வேப்பிலையின் மகத்துவத்தை நம்மால் உணர முடிகிறது.
6, உலகில் பல ஆயிரம் வகைகளில் மரங்கள் இருந்தாலும், வேப்பமரம் நமது சித்தர்பீடத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது.
7. வேப்பிலை காப்பினை அருள் திரு அம்மா அவர்களே அம்மா காப்பு என்று அழைப்பதன் மூலம் இதன் சிறப்பினை நாம் உணரலாம்.
*துளசிக் காப்பு*
1. துளசியை நம் நாட்டில் வாழ்ந்த ஒரு பெண்ணாகப் போற்றி மகிழ்வர்.
2. துளசிச் செடியைத் தெய்வமாக மதித்து வணங்குவது நமது இயல்பாகும்.
3. காக்கும் கடவுளான திருமாலுக்கு உகந்தது துளசி.
4. மருத்துவ குணங்களும் இந்த இலைக்கு உண்டு.
5. முறையாக விரதம் இருக்கும் பல ஆன்மீக அன்பர்களும், துளசி தீர்த்தம் அருந்திய பிறகே தங்கள் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.
6. துன்பங்களில் இருந்து நம்மைக் காக்கும் தூயவளான அன்னை விரும்பிச் சூடும் துளசி காப்பு.
*விபூதிக் காப்பு*
1. விபூதி என்றால் 'ஐஸ்வர்யம்' என்று பொருள்.
2. சித்தர்கள் விபூதியை மறைபொருளாகக் குறிப்பிடுகின்றனர். இந்த விபூதி, 4448 நோய்களைத் தீர்க்கக் கூடியது.
3. நமது உடலில் 11 இடங்களில் இந்த விபூதியைப் பூச வேண்டும், என்றும் அந்த 11இடங்களில் ருத்ரர்களின் தேவியர் வாசம் செயவதாகவும், ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகின்றனர்.
4. அன்னைக்குச் செய்யப்படும் இந்த விபூதி காப்பு அலங்காரம் வழியாக அன்னைக்கு இந்த பதினோரு தேவியரும் நம் உடலுக்கும், உள்ளத்திற்கும், பல நன்மைகளை புரிகின்றனர்.
*சந்தனக் காப்பு*
1. சந்தனம் பூசிக்கொள்பவருக்குக் குளிர்ச்சியைத் தருவது போல, அம்மாவும் தன்னை வழிபடுபவர் வாழ்வில் குளிர்ச்சியையும், அவரவர் மனங்களில் குளிர்ச்சியையும் அளிக்கிறார்கள்.
2. 'ஓம் சந்தனச் சாந்தணி உகப்பாய் போற்றி ஓம்' என்ற மந்திர வரியும் அன்னைக்கு சந்தனம் மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறது.
3. சில பக்தர்களுக்கு, சந்தனக்காப்பின் மூலம் சந்தானம், அதாவது குழந்தை வரம், அன்னை அருளியிருக்கிறாள்.
4. சந்தனம் அபிஷேகப் பொருளாகவும், நறுமணம் வீசும் பொருளாகவும் உள்ளது. நமது ஆன்மா குளிர்ச்சி பெற்று, நம்வாழ்வு நறுமணத்துடன் விளங்க அன்னைக்குச் சந்தனகாப்பு.
*நவதானியக் காப்பு*
1. 'நவ' என்றால் ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள்.
2. நவகிரகங்களைக் குறிக்கிறது அவற்றின் விபரம் பின்வருமாறு:
*தானியம்* - *கிரகம்*
-கோதுமை - சூரியன்
-நெல் - சந்திரன்
-துவரை - செவ்வாய்
-பாசிப்பயறு - புதன்
-கொண்டைக்
கடலை - வியாழன்(குருபகவான்)
-அவரை/
மொச்சை - வெள்ளி
-எள் - சனி
-உளுந்து - ராகு
-கொள்ளு - கேது
3. நவகிரகங்களைச் சாந்தப்படுத்தும் நவதானிய காப்பு.
4. கிரகக் கோளாறுகள், தோஷங்களில் இருந்து காக்க வல்லது.
5. ஜாதகமும் நமக்கு சாதகமாகும்.
*மிட்டாய் காப்பு*
1. 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்றும் 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்' என்றும் கூறுவது போல குழந்தைக்குப் பிடித்தமான மிட்டாயைக் காப்பாக அணியும் அன்னை, தானும் குழந்தை உள்ளம் படைத்தவள் என்று நமக்கு உணர்த்துகிறாள்.
2. மிட்டாய் இனிப்பாக இருப்பதைப் போல் எந்நேரமும் நமக்கு இன்பத்தை அதாவது பேரின்பத்தை அளிக்கப்போவதாக அம்மா இங்கே உணர்த்துகிறார்கள்.
*கற்கண்டுக் காப்பு*
1. கற்கண்டு என்ற புனிதப் பொருள் தெய்வங்களுக்குப் படைக்கக்கூடிய நைவேத்திய பொருளாகும்.
2. கற்கண்டு கரும்பில்லிருந்து பெறப்படும். கரும்பு விவசாயம் பனை விவசாயம் ஆகியவை செழிக்க உதவும்.
*உலர் பழங்கள் காப்பு*
1. உலர் பழங்கள் மாறுபட்ட வெப்ப நிலைகளிலும் அதன் சத்துகளையும், சுவையையும் இழப்பதில்லை. அதுபோல உலகில் பல சூழ்நிலைகள் மாறினாலும், "அன்னையை அடைய வேண்டும்" என்ற எண்ணத்தை நாம் கடைபிடிக்க வேண்டும்.
2. வெளிநாடுகளில் இருந்தும், நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விளைந்து வருகின்ற இந்த உலர் பழங்களை அன்னை, தான் சூடிக் கொள்வதன் மூலமாக, அனைத்து உலகிற்கும் தான் தாய், என்றும் எல்லா மக்களும் தன் குழந்தைகள் என்றும் உணர்த்துகிறாள்.
*லட்சார்ச்சனை வழிபாடு*
1. லட்சம் முறை அன்னையின் திருப்பெயர் உச்சரிப்பது லட்சார்ச்சனை. குடும்பமும் நலமுடன் வளம் பெற்று, அவரவர் லட்சியங்கள் நிறைவேற இந்த வழிபாடு நடக்கிறது.
2. அன்னையின் சித்தர் பீடத்தில் அன்னையின் 1008, 108 மந்திரங்கள் ஒலிக்கும் அதே நேரத்தில், பதிவு செய்தவர் பெயர் மற்றும் நட்சத்திரம் கூறி சங்கல்பம் செய்யப்படுகிறது.
3. லட்சார்ச்சனையில், நம் பெயர், நம் குடும்பத்தார் பெயருக்கு மட்டுமல்லாமல், நம்முடைய வண்டி, வாகனங்கள் எண்ணிற்கும், பணிபுரிகின்ற தொழில் நிறுவனங்கள், கடைகள், ஆகியவற்றின் பெயருக்கும் செய்யலாம்.
4. லட்சார்ச்சனை பிரசாதத்தினை (அன்னையின் திருவுருவப்படம், மஞ்சள், குங்குமம்,) அன்னையின் வழிபாட்டு மன்றங்கள் வாயிலாகவும், சித்தர் சக்தி பீடங்கள் மூலமாகவோ அல்லது மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திலோ பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.
பல்லவர்களால் புகழ்பெற்ற பல ஆலயங்கள் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைவகுரவர்களால் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவதலமான திருக்கழுக்குன்றம். இதன் வடகிழக்கே 8 கிமீ தூரத்திலும், முருகன் அசுரர்களை எதிர்த்துப் போர் புரிந்த தலமான திருபோருரில் இருந்து மேற்கு திசையில் 12 கிமீ தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 14 கிமீ தூரத்திலும், இயற்கை எழில் நிறைந்த, பசும்சோலைகள் சூழ்ந்த, வானாந்திர மரங்களாலும், மலைகலாலும் சூழப்பட்ட, திருநிலை கிராமத்தில் புள்ளினங்கள் இசைபாடும் குளம் மற்றும் ஏரி இருக்கரையின் மத்தியில் சுயம்பு லிங்கமாக தோன்றி சிவபெருமான் பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்பாளிக்கின்றார்.
சிவபெருமானே மனிதவடிவம் தாங்கி உலகலாம் வலம் வந்து திருநிலையில் ஒருநிலையாய் தன்பாதத்தை பதித்து நின்று பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார். இவ்வாலயத்தில் எம்பெருமானை சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.
முன் ஒரு காலத்தில் சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி பல அரிய வரங்கள் பெற்றான் அவற்றுள் முக்கியமானது அவனது மரணம் சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே நிகழ வேண்டும். மேலும் அதற்கு முன்னால் எம்பெருமான் மனித அவதாரம் எடுத்து முடித்திருந்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும் என்ற சிக்கலான வரம் பெற்று இருந்தான். இதனால் இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியை கைப்பற்றி பலவகையில் தொல்லை கொடுத்து வந்தான். அசுரனின் தொல்லை பொருக்க முடியாமல் சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டு காக்குமாறு வேண்டினர். தேவர்களை காக்கும் பொருட்டும் அசுரர்களை அழிக்கும் எண்னத்துடன் சக்தியைக் காண எம்பெருமான் சென்றார்.
அசுரர்களின் அராஜகம் அதிகமாகி விட்டதால் அவர்களை உடனே அழித்து தேவர்களை காக்க வேண்டும், உடனே புறப்படு என்று கூறி நின்றார். ஜயன் கூறியதைக் கேளாமல் உமையவள் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து அமைதி பூண்டு இருந்தார். தாயிடம் இருந்து பதில் வரததால் கோபம் கொண்ட எம்பெருமான் என்னுடைய சொல் கேட்டு பதில் கூறாமல் இருக்கும் நீ மீண்டும் மானிட பெண்ணாக பிறப்பாய் என கண்கள் கனல் கக்க எச்சரித்தார். இவ்வார்த்தை கேட்டு தியாணத்தில் இருந்து விழித்தெழுந்த பார்வதிதேவி ஜயனை நோக்கி எம்மை மானிடராக பிறக்க சொல்லும் நீவிர், எம்மில் பாதியாக விளங்குபவர் தானே ஆகவே நீரும் ஓரு நாழிகை மனிதனாக பிறக்க வேண்டும் என சாபமிட்டார். உமை அவதாரத்தின் ஆழமும், அர்த்தமும் புரிந்து பேசினாள். இவ்வார்த்தையைக் கேட்ட ஜயனின் சித்தம் மெல்ல கலங்கியது. ஈசன் தன்நிலை மறந்து மனித அவதாரம் கொண்டார். உலகமெல்லாம் திக்கு திசையின்றி அலைந்து திரிந்து வந்தார். பரமனின் இந்நிலை கண்டு உமையவள் அச்சமுற்றாள். உலக ஜீவராசிகள் பயத்தில் நடுங்கின. தேவர்கள் முதலனோர் தாயிடம் வணங்கி பரமனை காத்து அருளுமாறு வேண்டினர்.
உடனே தாய் தன் சூலாயுதத்தை வீசி எறிந்தாள் அது பிரகாசமாய் பூமியில் ஓர் இடத்தில் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்தன. பின் அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி சுற்றி ஜயனின் வருகைக்காக காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு எம்பெருமான் திருநிலையாய் ஓர் இடத்தில் பாதம் பதித்து ஒருநிலையாய் நின்றார். பார்வதிதேவி அவ்விடத்திலேயே வணங்கி நின்றாள். ஒரு நாழிகை நேரமும் முடிய மனிதனாய் வந்தவர் சிவமாய் உறுமாறி தோன்றினார். மேலும் பெரிய மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிரே இன்று முதல் பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர் என உமையவள் கூறினாள். இவ்வார்தையை கேட்ட தேவர் முதலானோர் பெரியாண்டவா பெரியாண்டவா எனக் கூறி அழைத்து அவர் பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சுற்றி நின்ற சிவகணங்களும் எம்பெருமான் நாமம் கூறி வணங்கி நின்றன.
ஒருநிலையில் திருநிலையாய் நிறுத்திய இவ்விடம் திருநிலை என அழைக்கப்படும் எனக் கூறிய ஜயன், மேலூம் உலகை காக்கும் நாயகி உமையவள் என்னை திருநிலையாய் நிலை கொண்டு ஆட்கொண்டதால் இன்று முதல் திருநிலைநாயகி எனஅழைக்கப்படுவாள் என்று வாழ்த்தினார். இவ்வார்த்தையைக் கேட்ட தேவர் முதலானோர் திருநிலை நாயகி என அழைத்து மகிழ்ந்து அவர் பொற்பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சிவபெருமான் திருநிலையாய் ஒருநிலையில் தன்பாதம் பதித்து அருள்புரிந்த திருத்தலமே திருநிலையாகும்.
மேலும் பார்வதிதேவி தாயின் கருவின்றி பெரியமனிதனாக தோன்றி நிவீரே உலகை வலம் வந்தமையால் இவ்வுலகில் கருவின்றி வாடும் தம்பதியர்க்கு யார் இவ்விடத்தில் உன்நாமம் நினைக்கின்றார்களோ அவர்களுக்கு மழலைகளை வழங்கி அருள் புரியவேண்டும் என வேண்டினார். இறைவனும் அவ்வாறே நடைபெறும் என அருளினார்.இன்றும் இவ்வாலயத்தின் அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீறாடி இறைவனை நினைத்து மனம் உருகி நெய் திபம் ஏற்றினால் எந்த ஒரு தம்பதியும் குழந்தைபேறு பெருவார்கள் என்பது இறையன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்குகிறது.
மேலும் ஆண்டவனின் பாதம் பதித்த இடத்தில் ஜோதி வெளிப்பட்டு சுயம்பு லிங்கம் அமைந்துள்ளது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து 21 ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்து, பின் அவை ஒவ்வொன்றும் மண்ணில் இருந்து சிவகணங்களாக உருமாறி நின்றதை நினைவு கொள்ளும் விதமாக இவ்வாலயத்தில் 21 ஓர் மண் உருண்டைகள் சிவகணங்களாக செய்து வைத்து சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் அவைகளுக்கும் செய்து ஆராதனை காட்டி அருள் பெருவது எங்கும் காணாத அதிசயம் ஆகும். நந்தி பகவானூம் மனிதவடிவில் தோன்றி சிவனைபோல் அருள்வது இங்கு காணலாம்.
நெடுங்காலத்திற்கு முன்பு ஒரு தம்பதியினர் குழந்தைபேறு இல்லாமல் மனவேதனையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானை மனதில் நினைத்து மனமுருக வேண்டி துதித்து வந்தனர். ஒருநாள் சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி நான் பெரியாண்டவர் அவதாரக் கோலதில் உலகை வலம் வந்தபோது என்னை நிலைகொள்ள செய்த இடமான திருநிலைக்கு சென்று வேண்டினால் உங்களுக்கு மழலை செல்வம் கிட்டும் என்றும் மேலும் உங்களுக்கு வழிகாட்டியாக ஒரு பன்றி அழைத்து செல்லும் என்று கூறி மறைந்தார். அவர்களும் அங்கு எப்படி செல்வது என்று தெரியாமல் விழித்தபொது திடீர் என்று அங்கு ஒரு பன்றி தோன்றி அவர்களுக்கு வழி காட்ட அவர்களும் இறைவன் கூறியவாறே அதன் பின்னே சென்றனர். அது ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் திருநிலையாய் நின்று பின் திடிர் என காணமல் மறைந்து. இறைவனே தங்களுக்கு பன்றி உருவில் வந்து வழிகாட்டியதாக நினைத்து வழிபட்டபோது அந்த இடம் வெட்டவெளியில் ஒளிமயமாய் திகழ்ந்து ஜோதி தரிசனம் தந்தது. அதைக் கண்ட அவர்கள் பெரியாண்டவர் நாமத்தை மனமுருக சொல்லி வழிபட்டனர். ஒர் ஆண்டுகழித்து ஆண்குழந்தை பெற்றதாக கோயில் தல வரலாறு கூறுகின்றது.
திருநிலையில் ஒருநிலையாய் நின்று அற்புதங்கள் நிகழ்த்தி அன்பர்களை காத்திடும் இறைவனாக, நெஞ்சாரத் தம்மை பணிந்து வணங்குவோர்க்கு வேண்டும் வரம் வழங்கி, இந்த புவணத்தை காத்து ரட்சிக்கும் எம்பெருமானாக பெரியாண்டவர் விளங்குகிறார். இம்மை மறுமை எனும் பிறவிப் பெருந்துன்பம் போக்கி அடியாரை ஆட்கொள்ளும் நாயகனாக எம்பெருமான் காட்சிதருகின்றார். அவரின் அற்புதங்கள் கணக்கில் அடங்கா. மழலை இல்லா மங்கையரின் மனக்குறை களைந்து மழலைகளை உடன்வழங்கி, மனநலம் கண்டோர் வாழ்வில் நலவலம் வழங்கி, மணமாகதப் பெண்களுக்கு எளிதில் மணங்கூட்டி, ஏழை எளியோரின் வாழ்வை காத்து ரட்ச்சித்து, உழைத்து ஊர்காக்கும் உழவர்க்ளின் பயிர் வாழ மழைவளம் அளித்து, கொஞ்சித்தவழும் குழந்தைகளை அஞ்சாது காத்து, நாடிவரும் அடியார்கள் வாழ்வில் அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் வழங்கி மேன்மையான வாழ்வு தரும் இத்திருத்தலத்திற்கு வருகை தந்து பெரியாண்டவரின் பொற்பாதம் வணங்கி அவரின் திருவருளைப் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டுகின்றோம்.
பொதுமக்கள் பக்தர்கள் அனைவரும் உள்ளே சென்று தியானம் செய்ய அனுமதி உண்டு.
தியான மண்டபத்தின் உள்ளே இரண்டு பிரகாரங்கள்.
அவற்றின் மத்தியில் சுடர் பீடம்
வானளாவிய
கோபுரம்இவையனைத்திலும் கலை நயமிக்க வேலைப்பாடுகள்
சுற்றிலும் அனைத்து சித்த மகா புருஷர்களின் கற்சிற்பங்கள்
மேற்கூரை 12 ராசி
மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு
27 நட்சத்திரங்களுக்கும்
தனி இட ஒதுக்கீடு
அந்தந்த ராசிக்காரர்கள்
(1.அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார்.
2.பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார்.
3.கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார்.
4.ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார்.
5.மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார்.
6.திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் .
7.புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார்.
8.பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார்.
9.ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர்.
10.மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார்.
11.பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார்.
ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது.
12.உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார்.
13.அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார்.
14.சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார்.
15.சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார்.
16.விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார்.
17.அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார்.
18.கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார்.
19.மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார்.
20.பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார்.
21.உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர்.
22.திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார்.
23.அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார்.
24.சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார்.
25.பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார்.
26.உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார்.
27.ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார்.)
அவரவர் நட்சத்திரங்களுக்கு நேர் கீழே அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வேண்டும்.
மண்டபம் முழுதும் பொங்கி ஒலிக்கும் ஓங்கார ஒலிப் பிரவாகத்தில் மூழ்கி அன்னையை நினைத்து தியானம் செய்யும்போது கிடைக்கும் பேரின்பம்.
அதை அனுபவித்தே அறிய வேண்டும்.
அரங்கின் அத்தனை உட்புறச் சுவர்களின் ஆதி முதல் இன்று வரை நமது ஆலய வரலாற்றை விவரிக்கும் வண்ணமிகு ஓவியங்கள் புகைப்படங்கள்
யோக நிலையில் யோகியரின் சுதைச் சிற்பங்கள் வண்ணங்களில்.
இவற்றிற்கெல்லாம் மேலாக தியான மண்டபத்தைச் சுற்றிலும் பூந்தோட்டங்கள்
குழந்தைகள் விளையாட பார்க்குகள் (Park)
எல்லாவற்றிற்கும் மேலாக இரவின் சொர்க்கமாகத் திகழும் வண்ண நடன நீரூற்றுக்கள அதனைத் தாங்கிய பெரும் வாவி. அதன் நடுவே மைய மண்டபம். அதில் கொலு வீற்றிருக்கும் அன்னை ஆதிபராசக்தியின் அருமைக் கோலம்.