1. மனம்
மனைவி, மக்கள், தாய், தந்தை அனைவருடனும் சேர்ந்து வாழுங் கள்.அவர்களுக்கான எல்லாக் கட | மைகளையும் செய்யுங்கள். ஆனால் மன்தை மட்டும் இறைவனிடம் செலுத்துங்கள். குடும்ப உறவு களோடு சேர்ந்து வாழும் அதே வேளையில், அவர்கள் உன்னுடை யவர்கள் அல்ல என்பதையும் உணர்ந்து கொள்.
-ஸ்ரீராமகிருஷ்ணர்.
2. ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறையில்தான் இருக்கிறது.
3. கடவுளைக் காண முற்படுகிறவன் பக்தன்!!! அவனைக் கண்டுணர்ந்தவன் சித்தன்!!!
4. தேவைக்காக இறைவனை தேடாமல் தேவையே நீதான் இறைவா என்றிறு! உன் இதயமே இறைவன் சன்னதியாகும் உன் வாக்கே இறையருளாகும்! அகத்தியர் அருள்வாக்கு!
5. தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா.
அகத்தியர்
6. அற்புதம் நிறைந்த இவ் உடலை அற்பமாய் இழந்துவிடாதே மானிடா!!
சமநீதி
7. ஒருவன் எம்மை நாடாவிட்டாலும் பரவாயில்லை! மெய்யாகவே தர்மவானாக, எல்லா நிலைகளிலும் நல்லவனாக. தன் மனசாட்சிப்படி வாழ்ந்து வந்தால், அவன் எம்மை தேடவேண்டாம். யாமே அப்படிப்பட்ட மனிதனைத் தேடிச் செல்வோம். அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!"
No comments:
Post a Comment