அதர்வணபத்ரகாளி
இந்து சமயப் பெண் தெய்வம் ஆவார். பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இவர் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். அதர்வணபத்ரகாளி நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.ஏவல், பில்லி, சூனியம், மாந்திரிகம், வைப்பு முதலானவை நீங்கிவிடும்.
அதர்வணபத்ரகாளி 108 போற்றித் திருவுரு மந்திரத்தைச் சொல்லி ஜபியுங்கள். ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி.
செவ்வாய்க்கிழமையன்று என்றில்லாமல், எந்தநாளும் இந்த 108 போற்றி மந்திரத்தைச் சொல்லி பாராயணம் செய்து வழிபடுங்கள்.
ஓம்சக்தி!
அதர்வணபத்ரகாளி 108 போற்றித் திருவுரு
Download and
Share
No comments:
Post a Comment