திருநீற்றை மருந்தாக்கி உறுநோயை போக்கிட்ட குருவான பெரியாண்டவா கருக்கொள்ள வரம் வேண்டி வருகின்ற மாந்தர்க்கு தருகின்றாய் மகவல்லவா
விதிதன்னின் வலியாலே
விழிசோர்ந்து அழுவோர்க்கு
வழிகாட்டி நீயல்லவா மதிதந்து நிதிதந்து மனதார அருள்தந்து மகிழ்வாக எனைப்பாரய்யா
நீர்சூழ்ந்த உலகோரை நிதம் காக்கும் என்ஈசா
நினையன்றி துணையாரய்யா ஏர்கொண்டு வாழ்கின்ற
எளியோரின் துயர்போக்க பொழிகின்ற மழையல்லவா
No comments:
Post a Comment