Monday, August 16, 2021

பெரியாண்டவர் துதிப்பாமாலை

ஸ்ரீ பெரியாண்டவர் துதிப்பாமாலை




திருநீற்றை மருந்தாக்கி உறுநோயை போக்கிட்ட குருவான பெரியாண்டவா கருக்கொள்ள வரம் வேண்டி வருகின்ற மாந்தர்க்கு தருகின்றாய் மகவல்லவா

விதிதன்னின் வலியாலே
விழிசோர்ந்து அழுவோர்க்கு
வழிகாட்டி நீயல்லவா மதிதந்து நிதிதந்து மனதார அருள்தந்து மகிழ்வாக எனைப்பாரய்யா

நீர்சூழ்ந்த உலகோரை நிதம் காக்கும் என்ஈசா
நினையன்றி துணையாரய்யா ஏர்கொண்டு வாழ்கின்ற
எளியோரின் துயர்போக்க பொழிகின்ற மழையல்லவா

No comments:

Post a Comment