Sunday, August 28, 2022
சகல ஐஸ்வர்யங்களும் செல்வ வளங்களும் வாரி வழங்க இருக்கிறார்கள் ஸ்ரீ விநாயகப்பெருமான்
Saturday, August 20, 2022
வாராஹி மாலை
(Alice in Wonderland) by Lewis Carroll
(The wonderful wizard of Oz) l. Frank Baum
Best story books link 🖇️🔗
👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://www.amazon.in/s?k=Alice+in+Wonderland+book&linkCode=ll2&tag=dps079-21&linkId=8055b9bb79f501a2df1f8ba066080b55&language=en_IN&ref_=as_li_ss_tl
வாராஹி மாலை
1. வசீகரணம்
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே
2. காட்சி
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூஜித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.
3. பகை தடுப்பு
மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைக்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வாராஹி பகைஞரையே
4. மயக்கு (தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.
5. வெற்றி ஈர்ப்பு
நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம் இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.
6. உச்சாடணம் (ரோகஹரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவப் கொடுப்பாள் வாராஹி என் நாரணியே.
7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)
நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர் என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே
8. பெருவச்யம் ( திரிகால ஞானம்)
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வைகயத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.
9. பகை முடிப்பு
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே
10. வாக்கு வெற்றி
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.
11. தேவி வருகை
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழித்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் தவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.
12. ஆத்ம பூஜை
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே
13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.
14. மந்திரபூஜை
மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹி என் மெய்த் தெய்வமே.
15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே
16. வரம் பொழிதல்
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே !
17. வாழ்த்துதல்
வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.
18. நன்னீர் வழங்கல்
வேறாக்கும் நெஞ்சம் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.
19. புனித நீர் அருந்துதல்
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஒடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் எங்கள் அம்பிகையே.
20. மலர் வழிபாடு
தாமக் குழலும் குழையும் பொன் ஒலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.
21. தேவி சந்நிதானம் (கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நம்க்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள்கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே.
22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே.
23. புகழ்சொற்பாமாலை (மௌனாந்த யோகம்)
ஊரா கிலும் உடன் நாடாகிலும் அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவிஉண்டே.
24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.
25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.
26. படைநேமி வாழ்த்து (சித்தனானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே
27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.
28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வாராஹி என் நிர்க்குணியே
29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.
30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரி அயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையைவெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே.
31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே.
32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.
Friday, July 15, 2022
சங்கடஹர சதுர்த்தி சனிக்கிழமை விரதம்
<!-- Global site tag (gtag.js) - Google Ads: 10934757944 -->
<script async src="https://www.googletagmanager.com/gtag/js?id=AW-10934757944"></script>
<script>
window.dataLayer = window.dataLayer || [];
function gtag(){dataLayer.push(arguments);}
gtag('js', new Date());
gtag('config', 'AW-10934757944');
</script>
சங்கடஹர சதுர்த்தி சனிக்கிழமை விரதம்
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில்க
மிகச் சிறந்ததும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி
இன்று சனிக்கிழமை விரதம்
இருந்தால் அளவுக்கடந்த ஆனந்தத்தை அடையலாம்
சகல
சௌபாக்கியங்களையும் பெறலாம்
விநாயகர் சுலோகம் துதி:
சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்;
ப்ரசன்ன வதனம் த்யாயேத்
சர்வவிக்நோப சாந்தயே
விநாயகர் துதி மந்திரம் 12 முறை உச்சரிக்கவும்.
Saturday, July 2, 2022
Sunday, February 20, 2022
சித்தர்களின் பொன்மொழி
1. மனம்
மனைவி, மக்கள், தாய், தந்தை அனைவருடனும் சேர்ந்து வாழுங் கள்.அவர்களுக்கான எல்லாக் கட | மைகளையும் செய்யுங்கள். ஆனால் மன்தை மட்டும் இறைவனிடம் செலுத்துங்கள். குடும்ப உறவு களோடு சேர்ந்து வாழும் அதே வேளையில், அவர்கள் உன்னுடை யவர்கள் அல்ல என்பதையும் உணர்ந்து கொள்.
-ஸ்ரீராமகிருஷ்ணர்.
2. ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறையில்தான் இருக்கிறது.
3. கடவுளைக் காண முற்படுகிறவன் பக்தன்!!! அவனைக் கண்டுணர்ந்தவன் சித்தன்!!!
4. தேவைக்காக இறைவனை தேடாமல் தேவையே நீதான் இறைவா என்றிறு! உன் இதயமே இறைவன் சன்னதியாகும் உன் வாக்கே இறையருளாகும்! அகத்தியர் அருள்வாக்கு!
5. தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா.
அகத்தியர்
6. அற்புதம் நிறைந்த இவ் உடலை அற்பமாய் இழந்துவிடாதே மானிடா!!
சமநீதி
7. ஒருவன் எம்மை நாடாவிட்டாலும் பரவாயில்லை! மெய்யாகவே தர்மவானாக, எல்லா நிலைகளிலும் நல்லவனாக. தன் மனசாட்சிப்படி வாழ்ந்து வந்தால், அவன் எம்மை தேடவேண்டாம். யாமே அப்படிப்பட்ட மனிதனைத் தேடிச் செல்வோம். அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!"
Wednesday, February 16, 2022
ஸ்ரீ பெரியாண்டவர் 108 போற்றி//Sri pariyandaver 108 pootri
பௌர்ணமி,மஹாசிவராத்திரி,பிரதோசம், ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை பூஜை களின் போது, ஸ்ரீ பெரியாண்டவர் 108 போற்றி படித்து பயன் பெறுங்கள்
விநாயகர் வணக்கம்
மும்மூர்தி முதல் வோனே
மூலாதார கணபதியே
ஞானப் பழத்தை வென்ற விநாயக
பிரணவ மந்திரத்தின் ஒளியே
மூல பரம் பொருளை வணங்குகின்றேன் விநாயக போற்றி !
குரு வணக்கம்
குருவை வணங்குகின்றேன்
குரு உபதேசத்தை வணங்குகின்றேன்
குரு பார்வை வணங்குகின்றேன்
குரு மந்திரம் வணங்குகின்றேன்
குரு அருளை வணங்குகின்றேன்
குரு தட்சிணாமூர்த்தி பாதத்தை வணங்குகின்றேன்
வணங்குகின்றேன் வணங்குகின்றேன் வியாழன் கிழமையில் குருவை
ஸ்ரீ பெரியாண்டவர் 108 போற்றி
1. ஓம் ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமி போற்றி ஓம்
2. ஓம் திருநிலை பெரியாண்டவா போற்றி ஓம்
3. ஓம் சிவசங்கரனே பெரியாண்டவா போற்றி ஓம்
4. ஓம் கைலாசநாத பெரியாண்டவா போற்றி ஓம்
5. ஓம் ஓம் சக்தி பெரியாண்டவா போற்றி ஓம்
6. ஓம் உலகை வலம் வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
7. ஓம் தாயின் கருவின்றி பிறந்த பெரியாண்டவா போற்றி ஓம்
8. ஓம் பெரிய மனிதர் உருவில் தோன்றிய பெரியாண்டவா போற்றி ஓம்
9. ஓம் ஈசனின் அம்சம்மே பெரியாண்டவா போற்றி ஓம்
10. ஓம் தரிசனம் தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
11. ஓம் செல்வம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
12. ஓம் கல்வி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
13. ஓம் உண்மை உணர்த்தும் பெரியாண்டவா போற்றி ஓம்
14. ஓம் குழந்தை வரம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
15. ஓம் முக்தி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
16. ஓம் தர்மம் காத்த பெரியாண்டவா போற்றி ஓம்
17. ஓம் குலதெய்வம் பெரியாண்டவா போற்றி ஓம்
18. ஓம் சுயம்பு லிங்க பெரியாண்டவா போற்றி ஓம்
19. ஓம் மானிடம் காக்க வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
20. ஓம் அருள் தருவதில் முதற் கடவுளே பெரியாண்டவா போற்றி ஓம்
21. ஓம் ஒருநிலையாய் திருநிலையில் அமர்ந்த பெரியாண்டவா போற்றி ஓம்
22. ஓம் கண்ணிற்கு காட்சி தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
23. ஓம் சிவ சக்தி பெரியாண்டவா போற்றி ஓம்
24. ஓம் அர்த்தநாரீஸ்வர பெரியாண்டவா போற்றி ஓம்
25. ஓம் பூமியில் பாதம் பதித்த பெரியாண்டவா போற்றி ஓம்
26. ஓம் பிரபஞ்சத்தின் இயக்கமே பெரியாண்டவா போற்றி ஓம்
27. ஓம் திறந்தவெளியில் அமர்ந்த பெரியாண்வா போற்றி ஓம்
28. ஓம் குருவான பெரியாண்டவா போற்றி ஓம்
29. ஓம் பெரியோனே பெரியாண்டவா போற்றி ஓம்
30. ஓம் எமையாளும் பெரியாண்டவா போற்றி ஓம்
31. ஓம் சுகம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
32. ஓம் சூலாயுதம் ஏந்திய பெரியாண்டவா போற்றி ஓம்
33. ஓம் நல்வாழ்வை தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
34. ஓம் நலம் காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
35. ஓம் வளம் சேர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
36. ஓம் பலம் சேர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
37. ஓம் குலம் காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
38. ஓம் வெற்றி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
39. ஓம் பஞ்சம் போக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
40. ஓம் லிங்க வடிவே பெரியாண்டவா போற்றி ஓம்
41. ஓம் மனக்குறை தீர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
42. ஓம் கற்சிலை பெரியாண்டவா போற்றி ஓம்
43. ஓம் சக்தி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
44. ஓம் வரம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
45. ஓம் நடமாடும் பெரியாண்டவா போற்றி ஓம்
46. ஓம் வீரம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
47. ஓம் விபூதி காப்பு பெரியாண்டவா போற்றி ஓம்
48. ஓம் மஞ்சள் காப்பு பெரியாண்டவா போற்றி ஓம்
49. ஓம் நவ தானியம் காப்பு பெரியாண்டவா போற்றி ஓம்
50. ஓம் நவ கோல் ஆலூம் பெரியாண்டவா போற்றி ஓம்
51. ஓம் மண் உருவம் கொண்ட பெரியாண்டவா போற்றி ஓம்
52. ஓம் சிவனடியார்களுக்கு அருள்புரிந்த பெரியாண்டவா போற்றி ஓம்
53. ஓம் பன்றி உருவில் வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
54. ஓம் ஜோதி வடிவே பெரியாண்டவா போற்றி ஓம்
55. ஓம் ஒளி வீசும் இடமே பெரியாண்டவா போற்றி ஓம்
56. ஓம் பன்னீரால் அபிஷேக உவந்த பெரியாண்டவா போற்றி ஓம்
57. ஓம் எதிர்மறை எண்ணங்கள் நீங்கிய பெரியாண்டவா போற்றி ஓம்
58. ஓம் அமைதி தவழும் பெரியாண்டவா போற்றி ஓம்
59. ஓம் வானமே கூரையாக கொண்ட பெரியாண்டவா போற்றி ஓம்
60. ஓம் ஞாயிற்றுக்கிழமையில் அருள் தருவாய் பெரியாண்டவா போற்றி ஓம்
61. ஓம் சித்தர்களுக்கு அருள் புரிந்த பெரியாண்டவா போற்றி ஓம்
62. ஓம் சுந்தரபத்திரனை அழிக்க உரு எடுத்தாய பெரியாண்டவா போற்றி ஓம்
63. ஓம் விமோசனம் தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
64. ஓம் உமாதேவி சாபத்தால் உருவான பெரியாண்டவா போற்றி ஓம்
65. ஓம் மலர் அலங்காரத்தில் காட்சி தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
66. ஓம் தியான ஒளியே பெரியாண்டவா போற்றி ஓம்
67. ஓம் தாய், தந்தை நீயே பெரியாண்டவா போற்றி ஓம்
68. ஓம் உலக மக்கள் காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
69. ஓம் நீரில் குளித்த பெரியாண்டவா போற்றி ஓம்
70. ஓம் இன்பம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
71. ஓம் எத்திசை ஆலூம் பெரியாண்டவா போற்றி ஓம்
72. ஓம் ஐயா பெரியாண்டவா போற்றி ஓம்
73. ஓம் ஆதி சங்கரர் பெரியாண்டவா போற்றி ஓம்
74. ஓம் ருத்ர பெரியாண்டவா போற்றி ஓம்
75. ஓம் தேவர் போற்றிய பெரியாண்டவா போற்றி ஓம்
76. ஓம் தேவ தேவா பெரியாண்டவா போற்றி ஓம்
77. ஓம் நீலகண்ட பெரியாண்டவா போற்றி ஓம்
78. ஓம் உயிரை காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
79. ஓம் பூமி காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
80. ஓம் மண் உருவில் வந்து அருள் தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
81. ஓம் பைரவ மூர்த்தி பெரியாண்டவா போற்றி ஓம்
82. ஓம் 27 நட்சத்திர திக்கு அருள் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
83. ஓம் பூமாதேவி மடியில் படுத்த பெரியாண்டவா போற்றி ஓம்
84. ஓம் 12 ராசிக்கு நன்மை தரும் பெரியாண்டவா போற்றி ஓம்
85. ஓம் பெரிய நாயகன பெரியாண்வா போற்றி ஓம்
86. ஓம் கனவில் தோன்றிய பெரியாண்டவா போற்றி ஓம்
87. ஓம் அஸ்வினி தேவா பெரியாண்டவா போற்றி ஓம்
88. ஓம் உடல் நலம் தந்த பெரியாண்டவா போற்றி ஓம்
89. ஓம் மனதில் வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
90. ஓம் ஏழை எளிய மக்களுக்கு அருளும் பெரியாண்டவா போற்றி ஓம்
91. ஓம் முற்பிறவி பாவம் போக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
92. ஓம் அறம் வளர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
93. ஓம் முதியவர் உருவே பெரியாண்டவா போற்றி ஓம்
94. ஓம் 7 சக்கரம் ஒளி வீசும் பெரியாண்டவா போற்றி ஓம்
95. ஓம் அருளே அற்புதமே பெரியாண்டவா போற்றி ஓம்
96. ஓம் இன்னிசைப்பிரியனே பெரியாண்டவா போற்றி ஓம்
97. ஓம் பக்தர்க்கு எளியவனே பெரியாண்டவா போற்றி ஓம்
98. ஓம் அகந்தை அழித்த பெரியாண்டவா போற்றி ஓம்
99. ஓம் மந்திரம் ஒளி பெரியாண்டவா போற்றி ஓம்
100. ஓம் நமசிவாய பெரியாண்டவா போற்றி ஓம்
101. ஓம் மங்கள தீர்த்தம் பெரியாண்டவா போற்றி ஓம்
102. ஓம் பஞ்சம் போக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
103. ஓம் துணை வரும் பெரியாண்டவா போற்றி ஓம்
104. ஓம் துன்பம் துடைக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
105. ஓம் தீய சக்தி அழிக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்
106. ஓம் காற்று சக்தி பெரியாண்டவா போற்றி ஓம்
107. ஓம் 21 சிவ கணங்கள் அருள் புரிந்த பெரியாண்டவா போற்றி ஓம்
108. ஓம் எம் குலம் தழைக்க வந்த பெரியாண்டவா போற்றி ஓம்
ஓம் பெரியாண்டவர் சுவாமியே போற்றி ஓம்
ஓம் பெரியாண்டவர் சுவாமியே போற்றி ஓம்
ஓம் பெரியாண்டவர் சுவாமியே போற்றி ஓம்
ஓம்
ஓம்
ஓம்