Wednesday, June 16, 2021

வேண்டுதற் கூறு மந்திரமும் விளக்கமும்


11 குன்றாத மறைந்த கொழுந்தே வருக! கோகிலமே வருக!

கொண்டுனை எண்டிசை கண்டுணர் கின்றவர் குறையறவே வருக!

மன்ற மணந்த முறையே வருக! மருவரசி வருக!

மண்ணினில் நின்றவர் கண்டவர் விண்டிலர் மனமிரங்கி வருக!

கன்று மறைந்த கனியே வருக! கலையே வருகவே!

கண்களை உண்டிட விண்டலம் நின்றிட கார்முகிலாய் வருக!

நின்று மலர்ந்த நினைவே வருக! நித்திலமே வருக!

நெஞ்ச மலர்ந்தவர் கொஞ்சி மகிழ்ந்திடும் நிறையறிவே வருகவே!

ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம்
ஓம்
ஓம்

No comments:

Post a Comment